சென்னை : பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதே போல் கொரோனா அரசியல் பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை. தமிழக ஆளுநர் புரோஹித், எனினும், நான் என்னை சூளைமேட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்டுள்ளேன். சரியான தருணத்தில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இன்னும் இரு தினங்களில் குணமடைந்து விடுவேன். எனக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நான் நல்லபடியாக இருக்கிறேன். எனவே, யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் . நான் இங்கு ஓய்வு எடுக்கவே வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.தற்போது 74 வயதான எஸ்.பி பாலசுப்ரமணியம் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.