சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9,38,125 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,66,669 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 8,52,515 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.19.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.