விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கிராம மக்கள் சாலையில் மரத்தை வெட்டிப் போட்டதால் ஆம்புலன்ஸிலேயே நேற்றில் இருந்து உடல் இருக்கிறது. மாற்று இடத்தில் கொரோனா நோயாளி உடலை அடக்கம் செய்ய கிராம மக்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது.