காஞ்சிபுரம்: உலகம் முழுதும் ஜூலை 30ம் தேதி மனித கடத்தல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது இதில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகளைபாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் செவிலிமேட்டி மனித கடத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி மணிமேகலை தலைமையில் நடந்தது. டிஎஸ்பி (பயிற்சி) வைஷ்ணவி கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து எளிதில் விடுபடுவதை எடுத்துரைத்தார்.