வீட்டை உடைத்து கொள்ளை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர், ஈபி காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (70). கடந்த 1ம் தேதி ரங்கநாதன், தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 19 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: