திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,096 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 358 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, 358 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். மேலும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதோடு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,096 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை, 11,402 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 3,437 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.