கார் மோதிய விபத்தில் டீ வியாபாரி உயிரிழப்பு

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த வானகரம் மேட்டுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (43). இவர் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் - மதுரவாயல் புறவழி சாலையில் போரூர் சுங்கச்சாவடி அருகே சைக்கிளில் சாலையை கடந்தார். அப்போது, வேகமாக வந்த கார், சைக்கிள் மீது மோதியதில் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கபாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரனையில், விபத்துக்கு காரணமான கல்லூரி மாணவர் மோகன்ராஜ் (25) என்பவரை கைது செய்தனர்.

இவர், மதுரவாயலில் தங்கி தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். சொந்த ஊருக்கு காரில் சென்றபோது, விபத்து நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: