×

பைக் விபத்தில் சிக்கியவர் மூச்சுத்திணறலால் பலி

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி, டி.எம்.பி நகர், நேரு தெருவை சேர்ந்தவர் முஸ்தபா (50). இவரது நண்பர் டேவிட் (52). இவர் பாடி, சத்தியா நகர், மகாவீரர் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முஸ்தபா, நண்பர் டேவிட் உடன் ஆவடியில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க பைக்கில் சென்றார். பின்னர், அவர்கள் இருவரும்  வீட்டுக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பைக் ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை கல்லறை தோட்டம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, இருவரும் எதிர்பாராதவிதமாக திடீரென்று பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், முஸ்தபாவுக்கு தலையில் பலத்த காயமும், டேவிட்டுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், இருவரும் சிகிச்சை முடிந்து இருவரும் இரவு வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று காலை முஸ்தபா மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : suffocation ,bike accident , Bike accident, suffocation, kills
× RELATED சிறப்பு வார்டில் இருந்து குணமடைந்து...