சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88 ஆயிரத்து 826 பேர் குணமடைந்துள்ளனர். 2176 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி கொசுக்கள் வளராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.