சென்னை: கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டு தினம்தோறும் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலைய கண்காணிப்பாளர் தலைமையில் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பராமரிப்பு பணி செய்தனர். அப்போது, சுரங்கநிலையத்திற்குள் ஆறரை அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.