×

தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் உயிரிழப்பு: 6,501 பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,68,285 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77.80% பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் இறப்பு தகவலை இந்திய மருத்துவர்கள் சங்கமும் மறுத்துள்ளது. கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,08,784 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,501 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 108 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,349 - ஆக உயர்ந்துள்ளது.

*  தமிழகத்தில் இன்று 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,023 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 27,86,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 77.80% ஆக உள்ளது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,122 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,063 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,62,476 ஆண்கள், 1,05,782 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ ஹிமாச்சல் பிரதேசம் -  01

     ^ கேரளா - 08

     ^ கர்நாடகா -  06

     ^ தெலுங்கானா - 03

     ^ ஆந்திரப்பிரதேசம் - 03

     ^ டெல்லி - 02

     ^ மகாராஷ்டிரா - 03

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ கத்தார் - 02

Tags : deaths ,Vijayabaskar ,Tamil Nadu ,Corona ,interview , Tamil Nadu, Corona, Minister Vijayabaskar, Interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...