இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா வைரஸ் தொற்று பகவான் ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும் : சிவசேனா நம்பிக்கை

மும்பை :இந்தியாவை ஆட்டிப் படைத்து கொரோனா வைரஸ் தொற்று பகவான் ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளது..  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் ஆரம்பித்த உடனேயே கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என்று சில அரசியல் பிரமுகர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். அந்த வரிசையில், கொரோனா வைரஸ் தொற்று பகவான் ராமரின் அருளால் முற்றிலும் ஒழிந்து விடும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பத்திரிகையான் சாம்னாவில், “பிரதமர் மோடி பூமிபூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவதைப் போன்ற ஒரு பொன்னான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது.  பகவான் ராமரின் அருளால் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்து விடும்.

அத்வானி, ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் வயதானதால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் கலந்து கொள்ள மாட்டார்கள். உமாபாரதியும் தன் மனக்கண்ணால் நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பார். பிரதமர் மொடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆகியோர் இருந்தாலும் அமித்ஷா இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டாது. இந்த தருணத்தில் அமித்ஷாவுக்கு துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அமித்ஷா, ஆனால் ராமர் புண்ணியத்தில் இவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று ஆழமாக நம்புகிறோம்.” இவ்வாறு அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: