குமரி: தோவாளையில் அரசு வழங்கிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் சாலையோரம் கிரந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் புத்தகங்களை ஒப்படைக்க சென்றவர்கள் டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மயங்கி கிடந்தனர். பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கான புத்தகங்களை உள்ளுறை சேர்ந்தவர்களிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. புத்தக பைகளை மாணவர்களிடம் ஒப்படைக்காமல் சாலையோரம் போட்டுவிட்டு மது அருந்தியுள்ளனர். சாலையோரம் கிடந்த புதிய புத்தகங்கள், சீருடைகளை பொதுமக்கள் மீண்டும் பள்ளியில் ஒப்படைத்தனர்.