தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக மாமனார் உள்பட 6 பேர் கைது

தருமபுரி : காதல் திருமணம் செய்த இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக மாமனார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த ஒட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்த விஜய் ஆக 1-ல் கொலை செய்யப்பட்டார். ராஜேஸ்வரி என்பவரை 6 மாதத்துக்கு முன் விஜய் காதல் திருமணம் செய்திருந்தார். காதல் திருமணம் செய்ததை எதிர்த்து வந்த ராஜேஸ்வரி தந்தை முனிராஜ் இளைஞர் விஜய்யை கொன்றதாக கைது செய்யப்பட்டார். முனிராஜுக்கு உதவியதாக அவரது உறவினர் வீரமணி, சித்துராஜ், மகாலிங்கம் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: