தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக அடித்து துன்புறுத்திய இளம்பெண் உயிரிழப்பு!!!

தெலுங்கானா:  தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி அடித்து துன்புறுத்தப்பட்ட இளம்பெண்  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலுங்கானாவில் மண்சிரியாளா மாவட்டம் குண்டாராமை சேர்ந்த ரஜிதாவும் மல்லேஷ் என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 2 மாதங்களே ஆன பெண்குழந்தை ஒன்று உள்ளது. இதனையடுத்து காதல் திருமணத்தை ஏற்காத மல்லேஷின் தாய் அந்த பெண்ணிற்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார்.

அதிலும் தற்போது கொடுமையின் உச்சகட்டமாக, மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த போலி மந்திரவாதியை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அந்த பெண் வலியால் அலறி துடித்துள்ளார். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. பின்னர் இளைஞரின் தாக்குததால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுயநினைவை இழந்தார்.

இதனையடுத்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜிதா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து ரஜிதாவுக்கு பேய் ஓட்டுவதாக கூறி சித்தரவதை செய்த இளைஞர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த ரஜிதாவின் சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாமியார் வீட்டாரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: