தஞ்சை: விபத்தில் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி, விபத்து ஆவணங்களை வக்கீலிடம் நேரில் கொடுக்க தஞ்சையில் இருந்து 165 கிலோ மீட்டர் மதுரைக்கு சைக்கிளில் சென்றார். தஞ்சையை அடுத்த வல்லம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலித்தொழிலாளி. கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ராஜா, கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒரு காலை இழந்தார். மதுரை நீதிமன்றத்தில் விபத்து வழக்கு தொடர்பாக, அவரது நண்பர் மூலமாக மதுரையில் உள்ள வழக்கறிஞரை நேரில் சந்தித்து அவரிடம் விபத்து தொடர்பான ஆவணங்களை நேரில் கொடுக்க முடிவு செய்தார்.