சென்னை: ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ்.அதிகாரி என்.பாஸ்கரன், தமிழநாடு காவலர் பயிற்சி பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே டி.ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ்.அதிகாரி ஜெய கவுரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐ.பி.எஸ்.அதிகாரி எம்.பாண்டியன் சென்னை போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.