கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தபோது, தமிழக சுகாதாரத்துறை, மாநகராட்சியின் தொடர் முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. ஆனால், தற்பொழுது சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. ஆகவே சென்னையைப் போன்று, புதுவியூகங்களை பிற மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தி, தொற்றைக் கட்டுப்படுத்த, அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளையும், மருத்துவக் குழுவின் ஆலோசனைகளையும் தவறாது மக்கள் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

Related Stories: