மதுரை: கொரோனா பாதித்தவர்களின் மன அழுத்தத்தை போக்க தன்னம்பிக்கை பயிற்சி அளிப்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த பிரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களும், பாதிப்பு உறுதியானவர்களும் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்படுகின்றனர். பலர் இறந்து விடுவோம் என நம்புகின்றனர். பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் கொரோனா பாதித்ததாக நினைத்து தற்கொலைக்கு முயன்றார். எதிர்மறையான எண்ணங்களால் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் போக்க கவுன்சலிங்: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு
- கொரோனா ஆலோசனை ஆலோசனை: மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கான உத்தரவு
- மாநில அரசுகள்
- முடிசூட்டு மனச்சோர்வு ஆலோசனை: கூட்டாட்சிக்கான உத்தரவு