சென்னை: வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில், வாடகை வாகனங்களுக்கு சாலை வரியை கட்ட சொல்வது நியாயமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலா வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தான். வருவாய் இல்லாமல் வாடுகின்றனர். இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.