ஸ்ரீபெரும்புதூர்: முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 16 சவரன் நகையை, மர்ம நபர்கள் பறித்து சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அகமது மொய்தீன் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (60). ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் கோயில் அருகில் கஸ்தூரி, தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்நிலையில் கஸ்தூரி, நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீராமானுஜர் கோயில் அருகில் மனவாள மாமுனி தெரு வழியாக நடைபயிற்சி செய்தார். அப்போது அவ்வழியாக, பைக்கில் வந்த 2 பேர், கஸ்தூரியிடம் முகவரி கேட்பதுபோல் ஒரு காகிதத்தை கொடுத்தனர். பின்னர், திடீரென அவரது கழுத்தில் இருந்த 16 சவரன் கொண்ட 2 செயினை பறித்தனர்.