முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 16 சவரன் நகையை, மர்ம நபர்கள் பறித்து சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அகமது மொய்தீன் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (60). ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் கோயில் அருகில் கஸ்தூரி, தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இந்நிலையில் கஸ்தூரி, நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீராமானுஜர் கோயில் அருகில் மனவாள மாமுனி தெரு வழியாக நடைபயிற்சி செய்தார். அப்போது அவ்வழியாக, பைக்கில் வந்த 2 பேர், கஸ்தூரியிடம் முகவரி கேட்பதுபோல் ஒரு காகிதத்தை கொடுத்தனர். பின்னர், திடீரென அவரது கழுத்தில் இருந்த 16 சவரன் கொண்ட 2 செயினை பறித்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, அவர்களை தடுத்தார். ஆனால் அவர்கள், மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, தங்க செயினை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பினர். இதில், கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த ஒரு சில மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: