செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டரை சந்தித்து மக்கள் ராஜ்ஜியம் கட்சியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி மனு அளித்தனர். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும் சேர்த்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை வரும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட வீரபோயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் ராஜ்ஜியம் கட்சியினர் ஆடு, மாடு, கோழி, எருமை ஆகியவற்றின் புகைப்படங்களை பதாகைகளாக ஏந்தி நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.