காஞ்சிபுரம்: பெரும்பாக்கம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசனிடம், அவர்கள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம், ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளில் பேசுகிறார். ஏற்கனவே 100 நாள் வேலையை 2 பிரிவுகளாக பிரிந்து வேலை செய்தோம். தற்போது 4 பிரிவுகளாக பிரித்து வேலை தரப்படுகிறது. இதில், ஒரு பிரிவுக்கு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே வேலை தரப்படுகிறது. இதில் ஒரு பிரிவினரில் மட்டும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தராமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.