செங்கல்பட்டு: தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள 15 ஏக்கர், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு தரக் கோரி, செங்கல்பட்டு கலெக்டரிடம், மதுராந்தகம் அருகே எடையாளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. மதுராந்தகம் தாலுகா எடையாளம் கிராமம் காலனி பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்துக்கு அருகில், 15 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலனி மக்கள், அந்த நிலத்தை சுடுகாடாகவும். கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தனர்.