வீடு புகுந்து திருடிய பணத்தில் ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியுடன் உல்லாசம்: பிரபல கொள்ளையன் வாக்குமூலம்

சென்னை: வீடுகளில் திருடிய பணத்தில் கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி கம்மல் வாங்கி கொடுத்து உல்லாசமாக இருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாசாலை பீட்டர்ஸ் சாலையில் உள்ள குடியிருப்பின் 3வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26ம் தேதி 5 சவரன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாசாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சக குடியிருப்புவாசிகள் பலர், தங்களின் வீடுகளிலும் அடிக்கடி நகை, பணம் திருடு போகிறது. குடியிருப்பு முன்பு நிறுத்தப்படும் பைக்குகளும் மாயமானதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் அடிக்கடி குடியிருப்புக்குகள் வந்து சென்றது தெரியவந்தது. அவரது புகைப்படத்தை ைவத்து விசாரித்ததில், திருவல்லிக்கேணி பழனியம்மன் கோயில் 6வது தெருவை சேர்ந்த மேகநாதன் (32) என தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, ‘கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாததால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி ைவத்துவிட்டு, வீடுகளில் திருடி வந்தது தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை தி.நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளார்.

அதில் கிடைத்த பணத்தில், தனது கள்ளக்காதலியை அழைத்து சென்று தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் அவருக்கு பிடித்த ‘ஜிமிக்கி கம்மல்’ ஒன்று வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளார். மீதம் இருந்த பணத்தை தனது கள்ளக்காதலியுடன் நட்சத்திர ஓட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்தும், மது அருந்தியும் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. பின்னர், மேகநாதனை கைது செய்து, திருடிய நகைகளை விற்பனை செய்த கடையில் இருந்து 18 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

Related Stories: