வெளிநாட்டில் சிக்கிய 255 இந்தியர் மீட்பு

சென்னை: அமெரிக்கா, அபுதாபி நாடுகளில் சிக்கித் தவித்த 255 இந்தியர்கள் மீட்கப்பட்டு 2 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 76 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தது. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். அபுதாபியிலிருந்து 179 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது.

அதில் ஆண்கள் 101, பெண்கள் 65,சிறுவர்கள் 8, குழந்தைகள் 5. அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் சவீதா மருத்துவ கல்லூரிக்கு 77 பேரும், 101 பேர் ஓட்டலுக்கும் அனுப்பப்பட்டனர். ஒருவர் சிறப்பு அனுமதி பெற்று நெய்வேலிக்கு சென்றார்.

Related Stories: