தமிழகத்தில் 21 டிஎஸ்பிக்கள் மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை சிபிசிஐடி மெட்ரோ-1 டிஎஸ்பியாக இருந்த ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் திருச்சி, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 21 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: