திருத்தணி: திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் டெல்லி ராஜன் (24). இதே பகுதி குளக்கரை தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (18). இருவரும் நேற்று முன்தினம் தங்களது இருசக்கர வாகனத்தில் திருத்தணி வழியாக திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மாவூர் பேருந்து நிறுத்தத்தில் பழுதாகி நின்றிருந்த கனரக லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினர். இதில் தூக்கி வீசப்பட்ட டெல்லி ராஜன், சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.