திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில் இயங்கிவரும் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. எனவே நிர்வாக வசதிக்காகவும், மின் கட்டணம் வசூல் செய்யும் மையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும், கனகவல்லிபுரம் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, ராஜாஜிசாலை, வீரராகவர் திரு மா.பொ.சி சாலை, கிழக்கு, மேற்கு, தெற்கு குளக்கரை தெருகள், பனகல் தெரு, சன்னதி தெரு, சி.வி.நாயுடு சாலை, போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் ஒற்றைப்படை மாதத்தில் இருந்து இனிமேல் இரட்டைப்படை மாதத்தில் மின் கட்டணம் செலுத்தலாம்.