திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்தி 66 ஆயிரத்தி 586 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 76,377 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88,672 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1,537 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.