சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கோரி தாய் அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.