மதுரை: மணல் கடத்தலை தடுக்க தாலுகா, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் பெயரளவில் தான் உள்ளது என்று ஐகோர்ட் கிளை வருத்தம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி வைப்பாற்றில் மணல் கடத்தலை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தலைமைச் செயளாலர், கனிம வளத்துறை ஆணையர், மற்றும் தூத்துக்குடி ஆட்சியர் ஆவணங்களுடன் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.