×

காரைக்குடியில் அதிசய வாழைமரம்: மேல் நோக்கி வளரும் வாழைத்தார்

காரைக்குடி: காரைக்குடியில் வாழைத்தார், வாழைப்பூ மேல்நோக்கி வளரும் அதிசய வாழை மரத்தை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனது வீட்டு தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். பொதுவாக வாழைமரங்களில் இலைக்கு மேல் இருந்தே குலை தள்ளுவது வழக்கம். வாழைத்தார் கீழ் நோக்கியே வளர்ந்து வாழைக்காய், கனியாக மாறும்.

ஆனால் இவரது வீட்டில் உள்ள வாழை மரத்தின் நடுவில் இருந்து குலை வெளிவர துவங்கியுள்ளது. வாழைப்பூ, வாழைத்தார் ஆகியவை மேல் நோக்கி வளர்கின்றன. இந்த அதிசய வாழை மரத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags : Karaikudi , Karaikudi, the wonder banana tree, lived
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!