குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் திருத்தணி - சித்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக, இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து, சோதனையிட்டனர். அப்போது, அந்த வாகனத்தின் பின்புறம் ஒரு மூட்டை இருந்தது. அதை சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்காவைப் பறிமுதல் செய்த போலீசார், அதை எடுத்து வந்த  ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

Related Stories: