புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ள ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடத்த அரசு அனுமதி அளித்தாலும், இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இந்த தொடர் செப்.19ம் தேதி தொடங்கி நவ.8ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. யுஏஈ கிரிக்கெட் அமைப்பு மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இது உத்தேச தேதிதான் என்று கூறப்பட்டது.