சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் அங்கிருந்து பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் சென்ற இருவரும் தற்போது பூமிக்கு திரும்பி வருகின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.