சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் டிஎன்பிஎல் போட்டி தொடங்குவது வாடிக்கை. கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி, யுஏஇ மைதானங்களில் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்படுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.