சென்னை: முன்னனி வீரர்கள் பங்கேற்கும் ஆன்லைன் செஸ் போட்டியில் அதிக தோல்விகளை சந்தித்த ஆனந்த் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ‘லெஜண்ட்ஸ் ஆப் செஸ்’ தொடரில் மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 9 சுற்றுகள் கொண்ட லீக் சுற்று முடிந்துள்ளது. ஆனந்த் முதல் 6 சுற்றுகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 7 வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்டை 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் அசத்தலாக வீழ்த்தினார். அடுத்து 8வது சுற்றில் தோற்ற ஆனந்த் கடைசி மற்றும் 9வது சுற்றில் உக்ரைனின் வஸ்ஸிலி இவான்சுக்குடன் மோதினார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தச் சுற்றில் இரண்டு பேரும் சமபலத்துடன் விளையாட போட்டி 2.5-2.5 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது. ஆனாலும் டை பிரேக்கேரில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.