ஐபிஎல் பைனல் தேதி மாற்றம்? ஆக.2ம் தேதி இறுதி முடிவு

மும்பை: கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடரை, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. போட்டி செப்.19 முதல் நவ.8ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் இறுதிப்போட்டி நடக்கும்போது இந்தியாவில் தீபாவளி விழாக் காலம். அதனால் பைனலை தள்ளி வைக்க வேண்டும் என்று போட்டியை ஒளிபரப்ப உள்ள ஸ்டார் டிவி தரப்பில் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து பைனல் நவ.10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உறுதியானால், இந்திய அணி யுஏஇ-ல் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இருப்பினும் ஆக.2ம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories: