பெங்களூரு : கொரோனாவில் இருந்து கர்நாடகாவை கடவுளால்தான் காக்க முடியுமென அந்த மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 900ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெங்களூருவில் ஏற்கனவே 22 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும் என்று பதிவிட்டார்.