லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,444 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 34 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 1,046 ஆக அதிகரித்துள்ளது.