தமிழகத்தில் வரி வருவாய் 63 சதவீதம் வீழ்ச்சி..: கொரோனா பேரிடரால் திண்டாடும் தமிழக அரசு!

சென்னை: கொரோனா பேரிடர் காரணமாக தமிழக அரசின் வரி வருவாய் 63% வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில்  தமிழக அரசுக்கு வரி வருவாய்  ரூ.12,318 கோடி மட்டுமே கிடைத்துள்ளதற்கு இதுவே காரணமாகும். 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,082 கோடி வரி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 63% வரி வருவாய் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்படும் ஒட்டு மொத வரி வருவாய் ரூ.1,33,530 கோடி ஆகும். இதில் முதல் காலாண்டு வரி வருவாய் ரூ.33,888 கோடி ஆகா இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா பேரிடர் காரணமாக வரி வருவாய் குறைந்துள்ளது என்றாலும் ஏப்ரல், மே மாதங்களை விட ஜூன் மாதம் வரி வருவாய் சற்று கூடுதலாகியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது காலால் வரியாகும்.  ஜூன் மாதம் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.724 கோடி கலால் வரியாக  கிடைத்துள்ளது. 2019ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.588 கோடி மட்டும்  கலால் வரியாக  கிடைத்தது. வருகிற காலங்களில் பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகனங்கள் விற்பனை மூலம் தமிழிகக அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி வரி நிலுவையாக மத்திய தொகுப்பிலிருந்தது தமிழகத்தின் பங்காக ரூ.4,600 கோடி கிடைத்திருப்பதும் தமிழக அரசின் நிதி திண்டாட்டத்தை ஓரளவு குறைத்துள்ளது. 

Related Stories: