கந்த சஷ்டி வீடியோ விவகாரத்தில் 'கறுப்பர் கூட்டம்'சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்

புதுச்சேரி :  கறுப்பர் கூட்டம் யு டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இது தொடர்பாக அந்த சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில்வாசன் என்பவரை கைது செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து, கருப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அவரை தமிழ்நாடு கொண்டு வர, தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

Related Stories: