சென்னை: கொரோனா நிவாரணத்திற்கு நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது என்கின்ற விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த கற்பகம் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கினை ஒரு பொதுநல வழக்காக தொடர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களில் எல்லாம் கொரோனா நிவாரண நிதி பெற்றவர்கள் பெயர்கள் பட்டியல், பயனாளிகள் யார்? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இணையதளத்தில் எந்தவொரு விவரமும் இடம்பெறவில்லை என்றும், எனவே அது தொடர்பாக அரசு, இணையதளத்தில் நன்கொடை அளித்தவர்கள் யார்?, யாரெல்லாம் பயனாளிகள், எவ்வளவு நிதி செலவிடப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.