×

ஆவடி மாநகராட்சியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும்  3 பேர் பலியாகி உள்ளனர். ஆவடி மாநகராட்சியில், தொற்றுக்கு நேற்று மட்டும் ஒரே நாளில் 26பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கடந்த 11ந்தேதி ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, பாரதி நகரை சேர்ந்த 56வயது மதிக்கத்தக்க பாதுகாப்பு துறை ஊழியர் தொற்றால் பாதிக்கப்பட்டு  நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மேலும், கடந்த 10ந்தேதி ஆவடி, சி.ஆர்.பி.எப் குடியிருப்பை சேர்ந்த 48வயது போலீஸ் ஏட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை பலனின்றி ஏட்டு பரிதாபமாக இறந்தார். மேலும், கடந்த 5ம்தேதி ஆவடி, கோவர்த்தனகிரி, பாரதி நகரை சேர்ந்த 75வயது பெண்மணி தொற்றால் பாதிக்கப்பட்டு வானகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், இது வரை ஆவடி மாநகராட்சியில் தொற்றால் 45 பேர் பலியாகியுள்ளனர்.


Tags : Avadi Corporation , Avadi Corporation, Corona, 3 persons, killed
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்