கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில், தனித்துவ நடவடிக்கையாக முதல் மந்தரி மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிட்டார். இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த கிளப்பில், கொரோனா பாதித்து அதில் இருந்து விடுபட்டோர், அரசு நிர்வாகம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதற்கட்டம் ஆக 60 பேர் அதில் இணைந்துள்ளனர் என முதல் மந்திரி கூறினார்.