சென்னை : கொரோனா நிவாரண நிதியாக பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை, பயனாளிகள் விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் என்றும் நீதிபதிகள் வினவி உள்ளனர்.தமிழகத்தில் மட்டும் கொரோனா நிதி குறித்த விவரம் வெளியிடப்படவில்லை என்பது மனுதாரரின் குற்றச்சாட்டாகும். கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிட கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.