கிருஷ்ணகிரி : எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குகிறது, என்றார்.கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி என்ற பகுதிக்கு எரிபொருள் எடுத்து செல்ல தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.