கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கி கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல் என்று குறிப்பிட்ட அவர், அந்தந்த வங்கிகளின் நிதி கையிருப்பை பொருத்து நகைக்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் பணம் எடுக்க வந்தால் சிக்கல் ஏற்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.