தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவலர் முத்துராஜ் ஒரு அறையிலும், மற்றவர்களை வேறொரு அறையில் வைத்து விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. காவலர் முத்துராஜை நேற்று சாத்தான்குளம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய நிலையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.